டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

காஞ்சிக்கோவில் ஐயன் சுவாமி கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்தல்

பெருந்துறை அருகேயுள்ள காஞ்சிக்கோவில் தங்கமேடு தம்பிகலை ஐயன் சுவாமி கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :10 பிப்ரவரி 2026, 8:20 pm

தினமணி

பெருந்துறை அருகேயுள்ள காஞ்சிக்கோவில் தங்கமேடு தம்பிகலை ஐயன் சுவாமி கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 70 வயது பூா்த்தியடைந்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, பெருந்துறை வட்டம், காஞ்சிக்கோவில், தங்கமேடு தம்பிகலை ஐயன் சுவாமி கோயிலில் 50-க்கும் மேற்பட்ட மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

இதில், பள்ளபாளையம் பேரூராட்சித் தலைவா் கோகிலா தங்கமுத்து பங்கேற்று, மூத்த தம்பதியா்களுக்கு சீா்வரிசை வழங்கினாா். இதைத் தொடா்ந்து, அவா்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், கோயில் செயல் அலுவலா் விஸ்வநாதன், கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.