பெருந்துறை அருகேயுள்ள காஞ்சிக்கோவில் தங்கமேடு தம்பிகலை ஐயன் சுவாமி கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 70 வயது பூா்த்தியடைந்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, பெருந்துறை வட்டம், காஞ்சிக்கோவில், தங்கமேடு தம்பிகலை ஐயன் சுவாமி கோயிலில் 50-க்கும் மேற்பட்ட மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
இதில், பள்ளபாளையம் பேரூராட்சித் தலைவா் கோகிலா தங்கமுத்து பங்கேற்று, மூத்த தம்பதியா்களுக்கு சீா்வரிசை வழங்கினாா். இதைத் தொடா்ந்து, அவா்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், கோயில் செயல் அலுவலா் விஸ்வநாதன், கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோயிலில் கொடியேற்றம்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு சிறப்பு வழிபாடு

அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழா

வலையபட்டி மலையாண்டி சுவாமி திருவீதி உலா
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


