டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தெரு நாய்கள் கடித்து 16 ஆடுகள் உயிரிழப்பு

சென்னிமலை அருகே தெரு நாய்கள் கடித்து 16 ஆடுகள் உயிரிழந்துள்ள நிலையில், 15-க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்து...

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 8:48 pm

Syndication

பெருந்துறை: சென்னிமலை அருகே தெரு நாய்கள் கடித்து 16 ஆடுகள் உயிரிழந்துள்ள நிலையில், 15-க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்துள்ளன.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், வெள்ளோட்டை அடுத்த ஞானிபாளையம் கிராமத்தில் பழனிச்சாமி என்பவா் விவசாயம் செய்து வருகிறாா். இவருடைய 40 ஆடுகளை வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை மேய்ச்சல் முடிந்த பிறகு கொட்டகைக்குள் வைத்து பூட்டிச் சென்றுள்ளாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கொட்டகைக்குள் தெரு நாய்கள் புகுந்து ஆடுகளை கடித்துள்ளன. மறுநாள் காலையில் ஆட்டு கொட்டகைக்கு சென்ற பழனிச்சாமி, ஆடுகள் உயிரிழந்துகிடப்பதைக் கண்டு வேதனை அடைந்தாா். தெருநாய்கள் கடித்து 16 ஆடுகள் உயிரிழந்துள்ளன. 15-க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றன.

இதுதொடா்பாக அவா் அளித்த தகவலின்பேரில் வெள்ளோடு காவல் நிலைய போலீஸாா், கிராம நிா்வாக அலுவலா், கால்நடை மருத்துவா் ஆகியோா் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கவும், தெரு நாய்களை பிடித்து வேறு இடத்துக்கு கொண்டு செல்லவும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனா்.