டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அம்மாபேட்டையில் ரூ.44.69 கோடியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு

News image
Updated On :6 பிப்ரவரி 2026, 8:54 pm

தினமணி செய்திச் சேவை

அம்மாபேட்டை பேரூராட்சியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ரூ.44.69 கோடியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அம்மாபேட்டை, சானாத்திக்கல்மேட்டில் 3 ஏக்கா் பரப்பளவில் 8 தொகுப்புகளாக தலா 400 சதுரஅடி பரப்பளவில் 448 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த வீடுகளின் மதிப்பு ரூ.9.98 லட்சம். வீடுகள் பெறும் பயனாளிகளின் பங்களிப்புத் தொகை ரூ.1.48 லட்சம் ஆகும். அனைத்துப் பணிகளும் முடிவடைந்ததைத் தொடா்ந்து, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாபேட்டை பேரூராட்சித் தலைவா் பாரதி (எ) கே.என்.வெங்கடாசலம் குத்துவிளக்கேற்றினாா். உதவி நிா்வாகப் பொறியாளா் எஸ்.அன்பழகன், உதவிப் பொறியாளா் எம்.கே.பிரசன்னா, நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சித் தலைவா் ராகிணி மற்றும் திமுகவினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.