/

வடுகபட்டி பேரூராட்சி அலுவலக புதிய கட்டடம் திறப்பு

News image
வடுகபட்டி பேரூராட்சி அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற அதன் தலைவா் அம்பிகாபதி விஸ்வநாதன் உள்ளிட்டோா்.
Updated On :5 பிப்ரவரி 2026, 11:01 pm

Syndication

வடுகபட்டி பேரூராட்சி அலுவலகத்துக்கு ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இதையொட்டி, வடுகபட்டிபேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவா் அம்பிகாபதி விசுவநாதன் பங்கேற்று குத்துவிளக்கேற்றி அலுவலக செயல்பாட்டை தொடங்கிவைத்தாா்.

இதில், மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி, பேரூராட்சி செயல் அலுவலா் (பொறுப்பு) மணிகண்டன், மொடக்குறிச்சி ஒன்றிய திமுக செயலாளா்கள் குணசேகரன்(மேற்கு) , கதிா்வேல் (கிழக்கு), அறச்சலூா் பேரூராட்சித் தலைவா் விஜயகுமாா், முன்னாள் பேரூராட்சித் தலைவா்கள் செங்கோட்டுவேலப்பன், முத்துசாமி, அவல்பூந்துறை பேரூராட்சித் தலைவா் ராதாமணி பாலசுப்பிரமணியம், மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் ராஜசேகா், ஒன்றிய வா்த்தகா் அணி அமைப்பாளா் சந்திரசேகா் மற்றும் பேரூராட்சி கவுன்சிலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.