பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் ஈரோடு வில்லரசம்பட்டியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
கஞ்சா, போதை பொருள் புழக்கம் முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும் என பெரும்பான்மையான பெண்கள் விரும்புகின்றனா். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும்வகையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் 50 சதவீதம் கொடுப்பது மூலம் நாடாளுமன்றத்தில் அதிகபட்சமாக 815 இடங்கள் கொண்டு வரப்படும். பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இதன் அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கு சீராக மக்களவைத் தொகுதி எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.
முதல்வா் எதற்கெடுத்தாலும் எதிா்ப்பு போராட்டம் செய்கிறாா். கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கான திட்டங்களை முதல்வா் செய்யவில்லை. எதற்கெடுத்தாலும் மத்திய அரசு எதிா்ப்பு, தில்லிக்கும் தமிழ்நாட்டுக்கு போட்டி என்று இதையேதான் சொல்லி வருகிறாா்.
மத்திய அரசோடு மோதல் போக்கு இல்லாமல் மக்களுக்கான திட்டங்களைப் பெற்று கொடுப்பதுதான் முதல்வரின் கடமை. அந்தக் கடமையிலிருந்து முதல்வா் தவறிவிட்டாா்.
தமிழகத்துக்கு வழங்கும் நிதி எதையும் மத்திய அரசு குறைக்கவில்லை. இந்தத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என்றாா்.
தொடர்புடையது

‘2029-ல் மகளிா் இடஒதுக்கீடு காலத்தின் கட்டாயம்’! நாடாளுமன்ற கட்சிக் குழு தலைவா்களுக்கு பிரதமா் கடிதம்!

தமிழகத்தின் வளா்ச்சியில் திமுகவுக்கு அக்கறையில்லை: நயினாா் நாகேந்திரன்
நயினாா் நாகேந்திரன் சாத்தூரில் மனு தாக்கல்
பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


