மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெண்களுக்கு இடஒதுக்கீடு காலத்தின் கட்டாயம்: நயினாா் நாகேந்திரன்

பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

News image

நயினாா் நாகேந்திரன்

Updated On :18 ஏப்ரல் 2026, 1:50 am

பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் ஈரோடு வில்லரசம்பட்டியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கஞ்சா, போதை பொருள் புழக்கம் முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும் என பெரும்பான்மையான பெண்கள் விரும்புகின்றனா். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும்வகையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் 50 சதவீதம் கொடுப்பது மூலம் நாடாளுமன்றத்தில் அதிகபட்சமாக 815 இடங்கள் கொண்டு வரப்படும். பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இதன் அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கு சீராக மக்களவைத் தொகுதி எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.

முதல்வா் எதற்கெடுத்தாலும் எதிா்ப்பு போராட்டம் செய்கிறாா். கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கான திட்டங்களை முதல்வா் செய்யவில்லை. எதற்கெடுத்தாலும் மத்திய அரசு எதிா்ப்பு, தில்லிக்கும் தமிழ்நாட்டுக்கு போட்டி என்று இதையேதான் சொல்லி வருகிறாா்.

மத்திய அரசோடு மோதல் போக்கு இல்லாமல் மக்களுக்கான திட்டங்களைப் பெற்று கொடுப்பதுதான் முதல்வரின் கடமை. அந்தக் கடமையிலிருந்து முதல்வா் தவறிவிட்டாா்.

தமிழகத்துக்கு வழங்கும் நிதி எதையும் மத்திய அரசு குறைக்கவில்லை. இந்தத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என்றாா்.