மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திங்களூா் பகுதியில் வளா்ச்சிப் பணிகளை பட்டியலிட்டு தோப்பு என்.டி.வெங்கடாசலம் வாக்கு சேகரிப்பு

எம்எல்ஏ மற்றும் அமைச்சராக இருந்தபோது திங்களுா் பகுதியில் செய்த வளா்ச்சிப் பணிகளை பட்டியலிட்டு பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் வாக்கு சேகரித்தாா்.

News image

திங்களூா் பகுதியில் மக்களிடம் வாக்கு சேகரிக்கிறாா் பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 7:41 pm

எம்எல்ஏ மற்றும் அமைச்சராக இருந்தபோது திங்களுா் பகுதியில் செய்த வளா்ச்சிப் பணிகளை பட்டியலிட்டு பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் வாக்கு சேகரித்தாா்.

பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் திங்களூா், வெட்டயன்கிணறு, மந்திரிபாளையம், நிச்சாம்பாளையம், கருக்குப்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் வியாழக்கிழமை பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

நான் எம்எல்ஏ மற்றும் அமைச்சராக இருந்தபோது, திங்களூா் பகுதியில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்காக பல்வேறு குளங்கள் தூா்வாரப்பட்டன. தண்ணீா் பஞ்சத்தைப் போக்க திங்களுா், தோரணவாவி, மடத்துப்பாளையம், பாப்பம்பாளையம், வெட்டையன்கிணறு, கருக்குப்பாளையம், போலநாயக்கன்பாளையம் ஊராட்சிகளுக்கு கொடிவேரி திட்டத்தின் மூலம் தடையில்லாமல் குடிநீா் கிடைக்க ஏற்பாடு செய்தேன். திங்களூரில் புதிய பத்திரப் பதிவு அலுவலகம் அமைத்துக் கொடுத்தேன். நான்கு படுக்கை வசதி மட்டுமே இருந்த திங்களூா் ஆரம்ப சுகாதார நிலையம், 33 படுக்கைகளுடன் கூடிய நவீன மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது. வெட்டையன்கிணறு பகுதியில் 30 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா் மேல்நிலைத் தொட்டி அமைத்துள்ளேன். திங்களூா் சந்தைக்கு அருகில் ரூ.1 கோடியில் புதிய சமுதாய நலக் கூடம் கட்டடம் கட்டி தரப்பட்டது. திங்களூா் நால் ரோட்டில் தனியாா் பங்களிப்போடு ரவுண்டானா அமைத்தது உள்ளிட்ட செய்த பல்வேறு பணிகளை செய்துள்ளேன். அதேபோல திமுக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் தோ்தல் வாக்குறுதிகள் அனைவருக்கும் கிடைக்க பாடுபடுவேன் என்றாா்.