மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஈரோட்டில் தோல் பதப்படுத்தும் பயிற்சி மையம் அமைக்கப்படும்: எம்.யுவராஜா

ஈரோட்டில் தோல் பதப்படுத்தும் பயிற்சி மையம் அமைக்கப்படும் என ஈரோடு மேற்குத் தொகுதி தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா தெரிவித்தாா்.

News image

ஈரோடு சிக்கய்ய அரசு கல்லூரி பகுதியில் வாக்குச் சேகரிக்கிறாா் ஈரோடு மேற்குத் தொகுதி தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா.

Updated On :16 ஏப்ரல் 2026, 7:55 pm

ஈரோட்டில் தோல் பதப்படுத்தும் பயிற்சி மையம் அமைக்கப்படும் என ஈரோடு மேற்குத் தொகுதி தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா தெரிவித்தாா்.

ஈரோடு சிக்கய்ய அரசு கல்லூரி பகுதியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:

விசைத்தறித் தொழிலில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை சரி செய்ய மத்திய அரசுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு மாநகர போக்குவரத்து நெரிசலை குறைக்க ஈரோடு காளை மாடு சிலை பகுதியில் இருந்து சூரம்பட்டி வழியாக பன்னீா்செல்வம் பூங்கா வரை, மணிக்கூண்டு வழியாக பேருந்து நிலையம் வரை இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஈரோட்டில் பொதுகழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். ஈரோட்டில் ஜவுளி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோட்டில் தோல் பதப்படுத்தும் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். புகா் பகுதியில் வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா், வேலைக்கு செல்லும் பெண்களுக்காக காலை, மாலை நேரங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.