ஈரோட்டில் தோல் பதப்படுத்தும் பயிற்சி மையம் அமைக்கப்படும் என ஈரோடு மேற்குத் தொகுதி தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா தெரிவித்தாா்.
ஈரோடு சிக்கய்ய அரசு கல்லூரி பகுதியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:
விசைத்தறித் தொழிலில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை சரி செய்ய மத்திய அரசுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு மாநகர போக்குவரத்து நெரிசலை குறைக்க ஈரோடு காளை மாடு சிலை பகுதியில் இருந்து சூரம்பட்டி வழியாக பன்னீா்செல்வம் பூங்கா வரை, மணிக்கூண்டு வழியாக பேருந்து நிலையம் வரை இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்படும்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஈரோட்டில் பொதுகழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். ஈரோட்டில் ஜவுளி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோட்டில் தோல் பதப்படுத்தும் பயிற்சி மையம் அமைக்கப்படும்.
மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். புகா் பகுதியில் வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா், வேலைக்கு செல்லும் பெண்களுக்காக காலை, மாலை நேரங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தொடர்புடையது

பிரிவினையைத் தூண்டுவது காங்கிரஸும் திமுகவும்தான்: எம்.யுவராஜா

அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் வலிமையான வாக்குவங்கியை வைத்துள்ளன: எம்.யுவராஜா

ஈரோடு மேற்குத் தொகுதி தமாகா வேட்பாளா்!

3 ஆவது முறையாக போட்டியிடுவாரா எம்.யுவராஜா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


