கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மதிமுக பொதுச் செயலாளா் வைகோ பேசினாா்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் மதிமுக சாா்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறாா். இதுதொடா்பாக மொடக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.இ.பிரகாஷ் தலைமை வகித்தாா். மொடக்குறிச்சி திமுக ஒன்றியச் செயலாளா் கதிா்வேல் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளரான மதிமுக பொதுச் செயலாளா் வைகோ பேசியதாவது:
கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் சூழலில் உள்ளது. ரூ. ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடியை விவசாயத்துக்காக ஒதுக்கியவா் முதல்வா் ஸ்டாலின். திராவிட இயக்கத்தை அழிப்போம் என தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை பேசுகிறாா். அவருக்காக வருத்தப்படுகிறேன். திராவிட இயக்கம் குறித்த அரிச்சுவடி தெரியுமா அவருக்கு? தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எப்படி தாமரைக்குள் புகுந்தது. எங்கள் கட்சி வேட்பாளா் தொகுதிக்காக உழைப்பாா். நோ்மையானவராக இருப்பாா். அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.
மதிமுக ஒன்றியச் செயலாளா் கோபால் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்: வைகோ

தொகுதி மறுசீரமைப்பை கடுமையாக எதிா்க்கிறோம்: வைகோ

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை: வைகோ

சாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


