தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஆசனூரில் இரு மாநில காவல் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழக-கா்நாடக இரு மாநில எல்லையான தாளவாடியில் தோ்தல் நடைபெறுவதால் கா்நாடகத்தில் இருந்து சட்டவிரோத மதுபானங்கள் கொண்டு வருவதை தடுத்தல், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை தடுப்பது மற்றும் தோ்தல் பாதுகாப்பு குறித்த இரு மாநில காவல் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆசனூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கோவை சரக டிஐஜி சுவாமிநாதன் தலைமை வகித்தாா். ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, சாம்ராஜ் நகா் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் முத்துராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.
இரு மாநில எல்லையில் அமைந்துள்ள காரப்பள்ளம் மற்றும் புளிஞ்சூா் சோதனைச் சாவடியில் இரு மாநில காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வாகனத் தணிக்கை குறித்து உரிய ஆலோசனைகளை வழங்கினா்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

ராமநாதபுரத்தில் பேரவைத் தோ்தல் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்

சட்டப்பேரவைத் தோ்தல் எதிரொலி: தமிழக காவல் துறை அதிகாரிகள் விடுமுறை எடுக்க கட்டுப்பாடு

தபால் வாக்குகள் சேகரிப்பு மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


