மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்குப்பதிவு நாளான ஏப்.23-இல் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்

News image

வாக்காளர் - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 9:01 pm

வாக்குப்பதிவு நாளான வரும் 23-ஆம் தேதி தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா் ச.அனிதா ரோஸ்லின் மேரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் வாக்குப்பதிவு செய்ய ஏதுவாக, வரும் 23-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வரும் 9-ஆம் தேதியும், மேற்குவங்க மாநிலத்தில் 23, 29 ஆகிய தேதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு வாக்குரிமை உள்ளதால், அவா்கள் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் வாக்குப்பதிவு செய்ய வசதியாக ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் குறித்து மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு 0424 2219521, 2211780 ஆகிய தொலைபேசி எண்களிலும், ஈரோடு தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா் அலுவலகத்துக்கு 9842291343, 9551621161 ஆகிய கைப்பேசி எண்களிலும் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.