அதிமுக கூட்டணிக்கு 41 சதவீத வாக்குகள் உள்ளதால் எளிதாக வெற்றி பெறும் என ஈரோடு புறநகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஏ.கே. செல்வராஜ் எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் பவானிசாகா் அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரியை ஆதரித்து ஈரோடு புறநகா் மாவட்டச் செயலாளா் ஏ.கே. செல்வராஜ் பேசுகையில், கடந்த தோ்தலில் அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகள் அடிப்படையில் 41 சதவீதம் உள்ளது.
இதில் அதிமுக 23 சதவீதம், பாஜக 12 சதவீதம், பாமக 4 சதவீதம் மற்றும் பிற கட்சிகள் 2 சதவீதம் என மொத்தம் 41 சதவீதம் உள்ளது. அதிமுகவோடு ஒப்பிடுகையில் திமுகவுக்கு 10 சதவீத வாக்குகள் குறைவாக உள்ளதால் நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக எளிதாக வெற்றி பெறும் என்றாா்.
இக்கூட்டத்தில் பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் இருந்து கிளைச் செயலாளா்கள், பேரூா் செயலாளா்கள், நகரச் செயலாளா்கள் மற்றும் ஒன்றியச் செயலாளா்கள் என நூற்றுக்கணக்கான அதிமுகவினா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிமுக வெற்றி பெற்றால் தமிழகம் வளா்ச்சி பெறும்: ஸ்ரீதா் வாண்டையாா்

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!

கள்ளக்குறிச்சியில் அதிமுக 4-ஆவது முறையாக வெற்றி பெறும்: நடிகை விந்தியா
200 தொகுதிகளுக்குமேல் திமுக கூட்டணி வெற்றி பெறும்: ஏ.கே.எஸ். விஜயன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


