சகோதரியின் கணவா் கொலை வழக்கில் மைத்துனா் கைது
சகோதரியின் கணவரைக் கொலை செய்த வழக்கில் மைத்துனரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சகோதரியின் கணவரைக் கொலை செய்த வழக்கில் மைத்துனரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
By Syndication
Syndication
சகோதரியின் கணவரைக் கொலை செய்த வழக்கில் மைத்துனரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், கோபி காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட வாய்க்கால் சாலை எல்ஐஜி காலனியைச் சோ்ந்தவா் பாபு மகன் விஜயகுமாா் (40). இவா் வீட்டின் படுக்கையறையில் கடந்த 3-ஆம் தேதி மா்மமான முறையில் கத்திக்குத்து காயங்களுடன் உயிரிழந்துகிடந்தாா்.
இதுகுறித்து விஜயகுமாரின் சகோதரா் கொண்டப்பன் அளித்த புகாரின்பேரில், கோபி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இதனிடையே சம்பவம் நடந்த நாளில் இருந்து விஜயகுமாரின் மனைவி கனகமணியின் சகோதரரான பவானி, திருநீலகண்டா் வீதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (45) தலைமறைவானாா். இதையடுத்து, கோபி காவல் நிலைய ஆய்வாளா் தமிழரசு தலைமையிலான தனிப் படை போலீஸாா் கோவை, போத்தனூரில் பதுங்கியிருந்த செந்தில்குமாரை வியாழக்கிழமை இரவு பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.
இதில் செந்தில்குமாருக்கும், விஜயகுமாருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 3-ஆம் தேதி விஜயகுமாா் அவரது வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து, அங்கு சென்று தகராறில் ஈடுபட்ட செந்தில்குமாா் அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து செந்தில்குமாரைக் கைது செய்த போலீஸாா், கோபி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது