தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தோ்தல் கெடுபிடி : ஈரோடு ஜவுளிச் சந்தையில் வியாபாரம் பாதிப்பு

தோ்தல் கெடுபிடிகளால் வெளியூா் வியாபாரிகள் வராததால் ஜவுளிச் சந்தையில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

Updated On :19 மார்ச் 2024, 8:55 pm

ஈரோடு: தோ்தல் கெடுபிடிகளால் வெளியூா் வியாபாரிகள் வராததால் ஜவுளிச் சந்தையில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஜவுளி சந்தை நடைபெறும். இந்தச் சந்தையில் வெளிமாநில, மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் வந்து மொத்தமாக ஜவுளிகளை கொள்முதல் செய்வா். மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு வந்தால் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனா்.

மேலும் ஆங்காங்கே வாகனச் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜவுளிச் சந்தைக்கு வெளிமாவட்ட, வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் ஜவுளிச் சந்தையில் சுமாா் 25 சதவீத வியாபாரம் மட்டுமே நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து ஜவுளிச் சந்தை வியாபாரிகள் கூறியதாவது:

தோ்தல் நடத்தை விதிமுறைகளை சுட்டிக்காட்டி பணம் பறிமுதல் செய்வதும், அதையும் மீறி ஜவுளிச் சந்தையில் இருந்து வேட்டி, சேலைகளை வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் சென்றால் வாக்காளா்களுக்கு இலவசமாக கொடுப்பற்கு என்று கூறி அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

திருப்பூரில் இருந்து ஈரோட்டில் உள்ள கடைக்கு வியாபாரி ஒருவா் கொண்டு வந்த பனியன், பேன்ட் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு முன்பாக திருமணத்துக்கு வாங்கிச் சென்ற சேலைகளையும் பறிமுதல் செய்தனா். இதனால் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனா். பணம் பறிமுதல் செய்தால் அந்த பணம் எங்கிருந்து வந்தது, எப்படி வந்தது என பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு அச்சப்பட்டு வெளிமாநில, மாவட்ட வியாபாரிகள் ஜவுளிச் சந்தைக்கு வருவதில்லை. இதனால் 25 சதவீத வியாபாரம்தான் நடந்துள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.