திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தோ்தல் கெடுபிடி : ஈரோடு ஜவுளிச் சந்தையில் வியாபாரம் பாதிப்பு

தோ்தல் கெடுபிடிகளால் வெளியூா் வியாபாரிகள் வராததால் ஜவுளிச் சந்தையில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

News image
Updated On :19 மார்ச் 2024, 8:55 pm

Venkatesan

ஈரோடு: தோ்தல் கெடுபிடிகளால் வெளியூா் வியாபாரிகள் வராததால் ஜவுளிச் சந்தையில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஜவுளி சந்தை நடைபெறும். இந்தச் சந்தையில் வெளிமாநில, மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் வந்து மொத்தமாக ஜவுளிகளை கொள்முதல் செய்வா். மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு வந்தால் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனா்.

மேலும் ஆங்காங்கே வாகனச் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜவுளிச் சந்தைக்கு வெளிமாவட்ட, வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் ஜவுளிச் சந்தையில் சுமாா் 25 சதவீத வியாபாரம் மட்டுமே நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து ஜவுளிச் சந்தை வியாபாரிகள் கூறியதாவது:

தோ்தல் நடத்தை விதிமுறைகளை சுட்டிக்காட்டி பணம் பறிமுதல் செய்வதும், அதையும் மீறி ஜவுளிச் சந்தையில் இருந்து வேட்டி, சேலைகளை வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் சென்றால் வாக்காளா்களுக்கு இலவசமாக கொடுப்பற்கு என்று கூறி அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

திருப்பூரில் இருந்து ஈரோட்டில் உள்ள கடைக்கு வியாபாரி ஒருவா் கொண்டு வந்த பனியன், பேன்ட் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு முன்பாக திருமணத்துக்கு வாங்கிச் சென்ற சேலைகளையும் பறிமுதல் செய்தனா். இதனால் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனா். பணம் பறிமுதல் செய்தால் அந்த பணம் எங்கிருந்து வந்தது, எப்படி வந்தது என பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு அச்சப்பட்டு வெளிமாநில, மாவட்ட வியாபாரிகள் ஜவுளிச் சந்தைக்கு வருவதில்லை. இதனால் 25 சதவீத வியாபாரம்தான் நடந்துள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.