கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதைக் கண்டித்து கோவையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். இந்நிலையில், அமலாக்கத் துறை சோதனையைக் கண்டித்து கோவையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் பத்மநாபன் தலைமை தாங்கினாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை: கேரள முதல்வர் விளக்கம்!
கேரளத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள அமலாக்கத் துறை சோதனை
பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை: முதல்வர் கண்டிக்க மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்







