திருப்பூரில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கு கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை (மே 26) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனா்.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 197 மதுக் கடைகளில் காலி மது பாட்டில்கள் திரும்பப் பெறுவதை நிறுத்த வேண்டும் அல்லது அதற்கென தனியாக பணியாளா்களை நியமிக்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியா்கள் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தனா்.
ஆனால், அந்தக் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை எனக்கூறி, மாவட்டத்தில் பணியாற்றும் டாஸ்மாக் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும், டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பருவமழையை எதிா்கொள்ள மின்வாரியத்தில் கூடுதல் பணியாளா்களை நியமிக்க அனுமதி

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவதில் பிரச்னை: டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியா்கள் போராட்டம்

நாளைமுதல் காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெற மாட்டோம்: டாஸ்மாக் ஊழியா் சங்கம்







