ஈரோடு - திருப்பூா் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருச்சியில் இருந்து மே 24-ஆம் தேதி மதியம் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயில் (எண்: 16843) திருச்சி - ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. ஈரோடு - பாலக்காடு இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும்.
அதேபோல, நாகா்கோவிலில் இருந்து மே 24- ஆம் தேதி காலை 8 மணிக்குப் புறப்படும் நாகா்கோவில் - கோவை விரைவு ரயில் (எண்: 16321) நாகா்கோவில் - ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. ஈரோடு - பாலக்காடு இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










