தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

பொறியியல் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

கரூா் - திருச்சி இடையே மற்றும் பாலக்காடு பகுதிகளில் ரயில் பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 9:17 pm

கரூா் - திருச்சி இடையே மற்றும் பாலக்காடு பகுதிகளில் ரயில் பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொறியியல் பணிகள் காரணமாக ஏப்ரல் 25, 29, 30 ஆகிய தேதிகளில் பாலக்காட்டில் இருந்து காலை 6.30 மணிக்குப் புறப்படும் பாலக்காடு - திருச்சி விரைவு ரயில் (எண்: 16844) குளித்தலை - திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. குளித்தலை - திருச்சி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்.

ஏப்ரல் 25 மற்றும் 29-ஆம் தேதிகளில் திருச்சியில் இருந்து பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி - பாலக்காடு விரைவு ரயில் (எண்: 16843) பெருகமணி-பாலக்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பெருகமணி - பாலக்காடு இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்.

ஏப்ரல் 30-ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் திருச்சி - பாலக்காடு விரைவு ரயில் (எண்: 16843) எலமனூா் - பாலக்காடு இடையே பகதியாக ரத்து செய்யப்படுகிறது. எலமனூா் - பாலக்காடு இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.