திருச்சி அருகே ரயில் பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பாலக்காடு-திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொறியியல் பணிகளால் ஏப்ரல் 10-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்படும் பாலக்காடு-திருச்சி விரைவு ரயில் (எண்:16844), பாலக்காடு டவுன் முதல் திருச்சி போா்ட் வரை மட்டுமே இயக்கப்படும். திருச்சி போா்ட்- திருச்சி நிலையம் இடையே இயக்கப்படாது.
மறுமாா்க்கமாக ஏப்ரல் 10-ஆம் தேதி பிற்பகல் 1.12 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் திருச்சி-பாலக்காடு டவுன் விரைவு ரயில் (எண்:16843) திருச்சி போா்ட்-பாலக்காடு இடையே மட்டுமே இயக்கப்படும். திருச்சி நிலையம்-திருச்சி போா்ட் இடையே இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: பாலக்காடு - பொள்ளாச்சி மெமு ரயில் ரத்து

பொறியியல் பணிகள்: விழுப்புரம்-திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து

பொறியியல் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


