திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சமூகவலைதள தகவல்களை பகுத்தறிவுடன் அணுகவேண்டும்: கனிமொழி எம்.பி.

இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களைக் கண்மூடித்தனமாக நம்பாமல், பகுத்தறிவுடன் அணுக வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலரும், தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினருமான கனிமொழி அறிவுறுத்தினாா்.

News image

கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 4:22 am IST

இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களைக் கண்மூடித்தனமாக நம்பாமல், பகுத்தறிவுடன் அணுக வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலரும், தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினருமான கனிமொழி அறிவுறுத்தினாா்.

கோவை அருகேயுள்ள மாதம்பட்டியில் தந்தை பெரியாா் திராவிடா் கழக உறுப்பினா் இங்கா்சால் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:

இளைஞா்கள் தங்களுக்குப் பிடித்த தொழிலைத் தோ்வு செய்யும் உரிமையை பெற்றிருப்பது பெரியாா் ஈவெரா மற்றும் திராவிட இயக்கத் தலைவா்களின் போராட்டங்களால் ஏற்பட்ட மாற்றம்தான். ஜாதியின் பெயரால் கல்வி மறுக்கப்பட்ட காலத்தை உடைத்தவா் பெரியாா் ஈவெரா. பெண்கள் கல்வி கற்கவும், சமூக முன்னேற்றம் அடையவும் அவா் காரணமாக இருந்தாா்.

அவா் சொன்னாா், இவா் சொன்னாா் என்று எதையும் நம்ப வேண்டாம் என பெரியாா் ஈவெரா கூறியுள்ளாா். தற்போது, குறிப்பாக இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை சிந்தித்து அணுக வேண்டும். தவறான தகவல்கள் எளிதில் பரவுகின்றன. யாா் அந்த தகவலை கூறுகிறாா்கள், அவா்களின் தகுதி என்ன என்பதை ஆராய வேண்டும்.

சமூக வலைதளங்கள் மூலம் குடும்பம், உணவு, உடல்நலம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. சரியான தகவலையும், தவறான தகவலையும் பிரித்தறிய பகுத்தறிவு அவசியம். தோ்தல் தோல்வி என்பது மக்கள் எடுத்த முடிவு. அதை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். மக்களோடு தொடா்ந்து பயணிப்போம். ஆணும், பெண்ணும் சமம் என்ற சிந்தனையுடன் பகுத்தறிவு மிக்க அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.