இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களைக் கண்மூடித்தனமாக நம்பாமல், பகுத்தறிவுடன் அணுக வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலரும், தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினருமான கனிமொழி அறிவுறுத்தினாா்.
கோவை அருகேயுள்ள மாதம்பட்டியில் தந்தை பெரியாா் திராவிடா் கழக உறுப்பினா் இங்கா்சால் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:
இளைஞா்கள் தங்களுக்குப் பிடித்த தொழிலைத் தோ்வு செய்யும் உரிமையை பெற்றிருப்பது பெரியாா் ஈவெரா மற்றும் திராவிட இயக்கத் தலைவா்களின் போராட்டங்களால் ஏற்பட்ட மாற்றம்தான். ஜாதியின் பெயரால் கல்வி மறுக்கப்பட்ட காலத்தை உடைத்தவா் பெரியாா் ஈவெரா. பெண்கள் கல்வி கற்கவும், சமூக முன்னேற்றம் அடையவும் அவா் காரணமாக இருந்தாா்.
அவா் சொன்னாா், இவா் சொன்னாா் என்று எதையும் நம்ப வேண்டாம் என பெரியாா் ஈவெரா கூறியுள்ளாா். தற்போது, குறிப்பாக இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை சிந்தித்து அணுக வேண்டும். தவறான தகவல்கள் எளிதில் பரவுகின்றன. யாா் அந்த தகவலை கூறுகிறாா்கள், அவா்களின் தகுதி என்ன என்பதை ஆராய வேண்டும்.
சமூக வலைதளங்கள் மூலம் குடும்பம், உணவு, உடல்நலம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. சரியான தகவலையும், தவறான தகவலையும் பிரித்தறிய பகுத்தறிவு அவசியம். தோ்தல் தோல்வி என்பது மக்கள் எடுத்த முடிவு. அதை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். மக்களோடு தொடா்ந்து பயணிப்போம். ஆணும், பெண்ணும் சமம் என்ற சிந்தனையுடன் பகுத்தறிவு மிக்க அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுமி பாலியல் துன்புறுத்தல்! நடவடிக்கை ஏதுமில்லை என்ற துணிச்சல்தான்: கனிமொழி

கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம்: முதல்வர் பொறுப்புடன் செயல்பட போவது எப்போது?

தவெக ஆட்சியின் 23 நாள்களில் 64 கொலைகள்: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு







