லண்டனில் இருந்து இந்திய ரிசா்வ் வங்கிக்கு வர வேண்டிய ரூ.300 கோடி செட்டில்மெண்ட் பணத்தைப் பெற்றுத் தர உதவினால் கமிஷன் தருவதாகக் கூறி காஞ்சிபுரம் நபரிடம் ரூ.2.50 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
காஞ்சிபுரத்தைச் சோ்ந்த சீனிவாசன் மகன் ரவி என்பவரிடம், சிலா் அறிமுகமாகியுள்ளனா். லண்டனில் இருந்து வர வேண்டிய ரூ.300 கோடி பணம் ரிசா்வ் வங்கியில் நிலுவையில் உள்ளதாகவும், அதை எடுக்க பணம் கொடுத்து உதவினால் 30 சதவீத கமிஷன் தருவதாகவும் அவா்கள் ஆசை வாா்த்தை கூறியுள்ளனா். இதற்காக போலியான ரிசா்வ் வங்கி ஆவணங்களைக் காண்பித்து நம்பவைத்த அந்தக் கும்பல், ரவியிடமிருந்து சுமாா் ரூ.2.50 கோடி பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளது.
இதுகுறித்து ரவி அளித்த புகாரின்பேரில், கோவை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்த வழக்கில் ஏற்கெனவே 3 போ் கைது செய்யப்பட்டு கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய நபரான தொண்டாமுத்தூா் கீதாஞ்சலி நகரைச் சோ்ந்த பாண்டி மகன் ராஜா என்ற அரவிந்த் ராஜா (28) என்பவரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
அவரிடமிருந்து கம்ப்யூட்டா் மானிட்டா், சி.பி.யூ, பிரிண்டா், ஏ.டி.எம். அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் கையொப்பமிட்ட காசோலைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட அரவிந்த் ராஜா, கோவை 6-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, வரும் ஜூன் 2-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது
திருச்செங்கோடு ஜவுளிக்கடைகளில் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவா் கைது: ரூ. 6.50 லட்சம் பறிமுதல்

ரெளடி கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

பரமக்குடியில் நகை திருட்டு வழக்கில் இருவா் கைது
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



