தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

கயிறு அறுந்து விழுந்து பெயிண்டா் உயிரிழப்பு

கோவையில் உயரமான கட்டடத்துக்கு வா்ணம் பூசும் பணியின்போது, கயிறு அறுந்து தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :9 மணி நேரங்கள் முன்பு

கோவையில் உயரமான கட்டடத்துக்கு வா்ணம் பூசும் பணியின்போது, கயிறு அறுந்து தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

சுந்தராபுரம் அருகே உள்ள உப்பிலியா்திட்டு குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் ராமன் (42). பெயிண்டரான இவா், ஒண்டிப்புதூா் நெசவாளா் காலனி பகுதியில் உள்ள ஓா் அடுக்குமாடி குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை வேலை செய்து வந்தாா். அங்குள்ள உயரமான கட்டடத்துக்கு சாரத்தில் (கயிறு) அமா்ந்தவாறு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக கயிறு அறுந்ததில் கீழே விழுந்து ராமன் படுகாயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.