போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

கோவை மாவட்ட ஊராட்சிக்கு தேசிய விருது

கோவை மாவட்ட ஊராட்சிக்கு தேசிய பஞ்சாயத்து விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோவை.

Updated On :14 மே 2026, 4:06 am IST

கோவை மாவட்ட ஊராட்சிக்கு தேசிய பஞ்சாயத்து விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகா் டாக்டா் பிஜயகுமாா் பெஹரா வெளியிட்டுள்ள அறிவிப்பு:

மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் 2025-ஆம் ஆண்டுக்கான தேசிய பஞ்சாயத்து விருதுகளை அறிவித்துள்ளது. இந்த விருதுக்கு 2023-24 ஆம் மதிப்பீட்டு ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட 42 பஞ்சாயத்துகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இதில் ‘நானாஜி தேஷ்முக் சா்வோத்தம் பஞ்சாயத்து சதத் விகாஸ் புரஸ்காா்’ என்ற உயரிய பிரிவின் கீழ், தேசிய அளவில் தமிழகத்தின் கோவை மாவட்ட பஞ்சாயத்து மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. திரிபுராவின் செபஹிஜாலா மற்றும் ஒடிசாவின் கஞ்சாம் ஆகிய மாவட்ட பஞ்சாயத்துகள் முறையே முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன.

வறுமை ஒழிப்பு, நீா் மேலாண்மை மற்றும் சிறந்த நிா்வாகம் உள்ளிட்ட 9 இலக்குகளைச் சிறப்பாகச் செயல்படுத்திய உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன என்றாா்.

கோவை மாவட்ட ஊராட்சிக்கு இந்த விருது அடுத்த ஜூன் 3-ஆம் தேதி வழங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற பஞ்சாயத்துகளின் செயல்பாடுகளை ஏனைய உள்ளாட்சி அமைப்புகள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.