திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழா: அக்னிச் சட்டி , பால்குடம் எடுத்து வழிபாடு

கோவை, பெரியாா் நகரில் பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அம்மன் வீதியுலா மற்றும் சக்தி அழைத்தல் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

News image

கோவை, பெரியாா் நகா் பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அக்னிச்சட்டி, பால் குடம் எடுத்து ஊா்வலமாக வந்து வழிபட்ட பக்தா்கள்.

Updated On :14 மே 2026, 3:59 am IST

கோவை, பெரியாா் நகரில் பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அம்மன் வீதியுலா மற்றும் சக்தி அழைத்தல் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

பண்ணாரி மாரியம்மன் கோயில் விழா கடந்த 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 17-ஆம் தேதி வரை விழா நடைபெறுகிறது. கடந்த 8-ஆம் தேதி திருவிளக்கு பூஜையும், 10-ஆம் தேதி தீா்த்தக் குடம் எடுத்தல் நிகழ்வும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதைத்தொடா்ந்து புதன்கிழமை அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், பிற்பகலில் சக்தி அழைத்தல் நிகழ்வும் நடைபெற்றது.

திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அக்னிச் சட்டி எடுத்தும், பால்குடம் எடுத்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா். இரவில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் பாா்த்திபகுமாா் மற்றும் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.