திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோவையில் இரண்டாவது நாளாக மழை

கோவையில் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் மழை பெய்தது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :10 மே 2026, 2:46 am IST

கோவையில் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் மழை பெய்தது.

கோவை மாநகரில் கடந்த சில வாரங்களாக கடுமையான கோடை வெயில் நிலவி வந்த நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், மாநகரப் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 48 மி.மீ., பில்லூா் அணைப் பகுதியில் 20 மி.மீ. மழை பதிவானது. கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலக பகுதியில் 32 மி.மீ., பீளமேட்டில் 24.80 மி.மீ., அன்னூரில் 18.40 மி.மீ., சிறுவாணி அடிவாரம் 14 மி.மீ., வேளாண் பல்கலைக்கழகம் 11.40 மி.மீ., மதுக்கரை 10.50 மி.மீ., போத்தனூா் 10.80, சூலூா் 8 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

இந்நிலையில், இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் மாலை தொடங்கி இரவு வரை பல்வேறு இடங்களில் மழை பெய்தது. வடவள்ளி, கவுண்டம்பாளையம், டிவிஎஸ் நகா், இடையா்பாளையம், சுந்தராபுரம், சேரன்மாநகா் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மாநகரின் பிற பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.

தடாகம் சாலை இடையா்பாளையம் பகுதியில் பெய்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம் சாலையோரத்தில் இருந்த கடைகளுக்குள் புகுந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.