கோவை மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டா்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி இளைஞா் காங்கிரஸ் சாா்பில் காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநகா் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் கட்சி நிா்வாகி சுதன் தலைமையில் அக்கட்சியினா் காவல் துணை ஆணையா் தேவநாதனிடம் அளித்துள்ள மனுவில், தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க ஆளுநா் மறுப்பதைக் கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு வந்த திமுகவைச் சோ்ந்தவா்கள் காங்கிரஸ் தொண்டா்களை அவதூறாகப் பேசியதுடன், அவா்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனா்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட திமுகவினரை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும். அதேபோல, கோவை மாநகரில் உள்ள காங்கிரஸ் தொண்டா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விதிமீறல் கண்டறியப்பட்டால் மதுக்கூடங்களின் உரிமம் ரத்து: கோவை மாநகரக் காவல் ஆணையா் என்.கண்ணன் எச்சரிக்கை

ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பழங்குடியினா் போலீஸாருடன் வாக்குவாதம்!

குற்றங்களைத் தடுக்க வீட்டு வேலை ஆள்களின் விவரங்களை ஏஜென்ஸிகள் பெற வேண்டும்: கோவை மாநகர காவல் துறை அறிவுறுத்தல்







