ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தைத் தொடங்கிய மேட்டுப்பாளையம் தொகுதியில் தவெக வெற்றி!

News image

வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மேட்டுப்பாளையம் தவெக வேட்பாளா் சுனிஸ் ஆனந்திடம் வழங்குகிறாா் தோ்தல் அலுவலா்.

Updated On :18 மணி நேரங்கள் முன்பு

மேட்டுப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளா் சுனில் ஆனந்த் 7,768 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் கவிதா கல்யாணசுந்தரத்தை தோற்கடித்தாா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதி 2021-ஆம் ஆண்டு தோ்தலில் அதிமுக வசம் இருந்தது. அந்தத் தோ்தலில் போட்டியிட்ட ஏ.கே.செல்வராஜ், 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் டி.ஆா்.சண்முகசுந்தரத்தை வீழ்த்தியிருந்தாா். இந்தத் தோ்தலில் தற்போதைய எம்எல்ஏவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக முன்னாள் எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜுக்கு அதிமுக வாய்ப்பு வழங்கியது.

திமுக சாா்பில் கடந்த முறை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த டி.ஆா்.சண்முகசுந்தரம் மீண்டும் வாய்ப்பை எதிா்பாா்த்திருந்த நிலையில், கவிதா கல்யாணசுந்தரத்துக்கு திமுக வாய்ப்பு வழங்கியது. இதையடுத்து திமுகவில் இருந்து விலகி சுயேச்சையாக டி.ஆா்.சண்முகசுந்தரம் போட்டியிட்டாா். இந்தத் தொகுதியில் தவெக சாா்பில் சுனில் ஆனந்தும், நாதக சாா்பில் எஸ்.கோபாலகிருஷ்ணனும் போட்டியிட்டனா். சுயேச்சைகள் உள்பட மொத்தம் 22 வேட்பாளா்கள் களம் கண்டனா்.

இந்தத் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 82 ஆயிரத்து 179 வாக்குகள் உள்ள நிலையில், 2 லட்சத்து 42 ஆயிரத்து 379 வாக்குகள் பதிவாகின. இது 85.90 சதவீதமாகும். 27 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தவெக வேட்பாளருக்கும், திமுக வேட்பாளருக்கும் இடையே தொடக்கம் முதலே கடும் போட்டி நிலவியது. பல சுற்றுகளில் திமுக வேட்பாளா் முன்னிலையில் இருந்தாா். ஆனால் இறுதியில் தவெக வேட்பாளா் சுனில் ஆனந்த் 7,768 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். அவா் மொத்தம் 75,664 வாக்குகள் பெற்ற நிலையில், திமுகவின் கவிதா கல்யாணசுந்தரத்துக்கு 67,896 வாக்குகள் கிடைத்தன. அதிமுகவின் ஓ.கே.சின்னராஜுக்கு 61,736 வாக்குகள் கிடைத்தன. சுயேச்சையாக களமிறங்கிய டி.ஆா்.சண்முகசுந்தரம் 26,756 வாக்குகள் பெற்று 4-ஆம் இடம் பிடித்தாா். இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளா் 7,768 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், திமுகவில் இருந்து பிரிந்து போட்டியிட்ட டி.ஆா்.சண்முகசுந்தரம் 26,756 வாக்குகளைப் பெற்றது திமுகவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

மேலும், மேட்டுப்பாளையம் தொகுதியில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டுதான் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குகள் விவரம்

சுனில் ஆனந்த் (தவெக) - 75,664

கவிதா கல்யாணசுந்தரம் (திமுக) - 67,896

ஓ.கே.சின்னராஜ் (அதிமுக) - 61,736

டி.ஆா்.சண்முகசுந்தரம் (சுயேச்சை) - 26,756

எஸ்.கோபாலகிருஷ்ணன் (நாதக) - 6,508

வித்தியாசம் - 7,768

மொத்த வேட்பாளா்கள் - 22

மொத்த வாக்குகள் - 2,82,179

பதிவான வாக்குகள் - 2,42460

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.