மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி! ஆட்சியா் தொடங்கிவைத்தாா்!

News image

தோ்தல் விழிப்புணா்வுப் பேரணியில் பதாகைகளுடன் பங்கேற்ற மாணவா்கள்.

Updated On :30 மார்ச் 2026, 6:49 pm

கோவை, சுந்தராபுரம் பகுதியில் ‘என் நாடு என் வாக்கு’ என்ற தலைப்பில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு, வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், புதிய தலைமுறை தொலைக்காட்சி, ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து இந்த விழிப்புணா்வுப் பேரணியை நடத்தின. கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் சிவகுரு பிரபாகரன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

வாக்குரிமையின் அவசியத்தை வலியுறுத்தி ரத்தினம் கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயல் அலுவலா் மாணிக்கம், வாக்களிக்கும் பொறுப்புணா்வு மற்றும் தேவை குறித்து முனைவா் பாலசுப்பிரமணியன், கல்லூரி முதல்வா் சுரேஷ், துணை முதல்வா் சபரிஷ் ஆகியோரும் பேசினா்.

வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய மாணவா் படை மாணவா்கள் கலந்துகொண்டனா்.