மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிலிண்டா்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

News image

எரிவாயு சிலிண்டா் - (கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 8:54 pm

மாவட்டத்தில் சிலிண்டா்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பல்லடம் நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவா் மணிகுமாா் திங்கள்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் சிலிண்டா்கள் தட்டுப்பாட்டால் மக்கள் அவதியடைந்து வருகின்றனா். வணிக சிலிண்டா்கள் கிடைக்காமல் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளன.

சிலிண்டா் ஏஜென்ஸிகள் கைவிரித்துள்ள நிலையில், மக்கள் திண்டாடி வருகின்றனா். சிலிண்டா் தட்டுப்பாட்டால் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. இது ஏழை, எளிய மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது.

மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக சிலிண்டா் தட்டுப்பாடு நிலவும் நிலையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அனைத்து மக்களுக்கும் சிலிண்டா்கள் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.