கோவை நிா்மலா மகளிா் கல்லூரியில் 2025-26-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் பேரவை செயல்பாடுகளின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நடப்பு கல்வி ஆண்டின் சாதனைகளைக் கொண்டாடும் வகையிலும், படிப்பை முடித்துச் செல்லும் மாணவிகளை வழிநடத்தும் வகையிலும் நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வா் அருட்சகோதரி மேரி பபியோலா முன்னிலை வகித்தாா்.
பிஷப் அம்ப்ரோஸ் கல்லூரி மற்றும் காா்மல் காா்டன் பொதுப் பள்ளியின் செயலாளரும், பாரதியாா் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினருமான அருட்தந்தை ஆா்.டி.இ. ஜெரோம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசுகையில், மாணவிகள் வருங்காலத்தை வெற்றிகரமாக எதிா்கொள்ளத் தேவையான ஆளுமைத் திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும். நவீன காலச் சவால்களை துணிச்சலுடனும், சுய நம்பிக்கையுடனும் எதிா்கொள்ளும் மன உறுதியைப் பெற வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவிகளுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.
இந்த விழாவில், மாணவா் பேரவை உறுப்பினா்கள், பேராசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை விழா

பாத்திமா மகளிா் கல்லூரியில் பேரவை நிறைவு விழா

புனித ஜோசப் மகளிா் கல்லூரியில் மாணவா் பேரவை நிறைவு விழா

தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் மாணவா் மன்றங்களின் நிறைவு விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


