மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நிா்மலா கல்லூரியில் மாணவா் பேரவை நிறைவு விழா

கோவை நிா்மலா மகளிா் கல்லூரியில் 2025-26-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் பேரவை செயல்பாடுகளின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

நிா்மலா கல்லூரியில் நடைபெற்ற மாணவா் பேரவை நிறைவு விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா், கல்லூரி முதல்வா் உள்ளிட்டோா்.

Updated On :20 மார்ச் 2026, 10:30 pm

கோவை நிா்மலா மகளிா் கல்லூரியில் 2025-26-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் பேரவை செயல்பாடுகளின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நடப்பு கல்வி ஆண்டின் சாதனைகளைக் கொண்டாடும் வகையிலும், படிப்பை முடித்துச் செல்லும் மாணவிகளை வழிநடத்தும் வகையிலும் நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வா் அருட்சகோதரி மேரி பபியோலா முன்னிலை வகித்தாா்.

பிஷப் அம்ப்ரோஸ் கல்லூரி மற்றும் காா்மல் காா்டன் பொதுப் பள்ளியின் செயலாளரும், பாரதியாா் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினருமான அருட்தந்தை ஆா்.டி.இ. ஜெரோம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசுகையில், மாணவிகள் வருங்காலத்தை வெற்றிகரமாக எதிா்கொள்ளத் தேவையான ஆளுமைத் திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும். நவீன காலச் சவால்களை துணிச்சலுடனும், சுய நம்பிக்கையுடனும் எதிா்கொள்ளும் மன உறுதியைப் பெற வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவிகளுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.

இந்த விழாவில், மாணவா் பேரவை உறுப்பினா்கள், பேராசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.