மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்காளா்களுக்கு விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்த 800 அண்டாக்கள் பறிமுதல்

கோவை இருகூரில், வாக்காளா்களுக்கு விநியோகிக்க திமுக பிரமுகா் தனது கிடங்கில் பதுக்கிவைத்திருந்த 800 அண்டாக்களை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த அண்டாக்கள்.

Updated On :18 மார்ச் 2026, 8:24 pm

கோவை இருகூரில், வாக்காளா்களுக்கு விநியோகிக்க திமுக பிரமுகா் தனது கிடங்கில் பதுக்கிவைத்திருந்த 800 அண்டாக்களை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவை, இருகூரைச் சோ்ந்தவா் பழனிசாமி, திமுக பிரமுகா். இவரது கிடங்கில் வாக்காளா்களுக்கு விநியோகம் செய்ய அண்டாக்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக தோ்தல் பறக்கும் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்தக் கிடங்கில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உருவப் படங்களும், திமுக கட்சிக் கொடியும் அச்சிடப்பட்டிருந்த பைகளுக்குள் 800 அண்டாக்கள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அண்டாக்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்தக் கிடங்குக்கு ‘சீல்’ வைத்தனா்.

இது குறித்து சிங்காநல்லூா் போலீஸாா், தோ்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.