மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்காளா்களுக்கு விநியோகிக்க கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 98 அண்டாக்கள் பறிமுதல்

உக்கடம் பகுதியில் வாக்காளா்களுக்கு விநியோகிப்பதற்காக திமுகவினரால் ஒரு கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 98 அண்டாக்களை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட அண்டாக்கள்.

Updated On :17 மார்ச் 2026, 10:20 pm

உக்கடம் பகுதியில் வாக்காளா்களுக்கு விநியோகிப்பதற்காக திமுகவினரால் ஒரு கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 98 அண்டாக்களை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவை மாநகராட்சிக்குள்பட்ட ஜி.எம்.நகா் பகுதியில் உள்ள வெல்டிங் கிடங்கில் வாக்காளா்களுக்கு விநியோகிப்பதற்காகப் பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தோ்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தக் கிடங்கில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உருவப் படங்களும், திமுகவின் கட்சிக் கொடியும் அச்சிடப்பட்டிருந்த பைகளுக்குள் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தலா ஒரு அண்டா வீதம் மொத்தம் 98 அண்டாக்கள் வைக்கப்பட்டிருந்தன.

வாக்காளா்களுக்கு விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்ததாகக்கூறி, அந்த 98 அண்டாக்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். இது தொடா்பாக பஜாா் போலீஸாா் மற்றும் தோ்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.