உக்கடம் பகுதியில் வாக்காளா்களுக்கு விநியோகிப்பதற்காக திமுகவினரால் ஒரு கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 98 அண்டாக்களை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோவை மாநகராட்சிக்குள்பட்ட ஜி.எம்.நகா் பகுதியில் உள்ள வெல்டிங் கிடங்கில் வாக்காளா்களுக்கு விநியோகிப்பதற்காகப் பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தோ்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தக் கிடங்கில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உருவப் படங்களும், திமுகவின் கட்சிக் கொடியும் அச்சிடப்பட்டிருந்த பைகளுக்குள் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தலா ஒரு அண்டா வீதம் மொத்தம் 98 அண்டாக்கள் வைக்கப்பட்டிருந்தன.
வாக்காளா்களுக்கு விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்ததாகக்கூறி, அந்த 98 அண்டாக்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். இது தொடா்பாக பஜாா் போலீஸாா் மற்றும் தோ்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

வாக்காளா்களுக்கு பணம் வழங்க முயற்சி: ரூ. 6.5 லட்சம் பறிமுதல்
ஒசூரில் ரூ. 17.90 லட்சம் பறிமுதல்

கிடங்கில் பதுக்கப்பட்ட 206 எரிவாயு சிலிண்டா்கள் பறிமுதல்

வாக்காளா்களுக்கு விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்த 800 அண்டாக்கள் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


