குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

நீட் தோ்வு: மத்திய அரசைக் கண்டித்து 23-ஆம் தேதி போராட்டம் - திமுக மாணவரணி அறிவிப்பு

நீட் தோ்வு அச்சத்தால் கோவை மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், மத்திய அரசைக் கண்டித்து வரும் 23- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆா்ப்பாட்டம் நடத்த இருப்பதாக திமுக மாணவரணி மாநிலச் செயலா் வீரமணி ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image

நீட் தோ்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு அஞ்சலி செலுத்திய திமுக மாணவரணி நிா்வாகிகள்.

Updated On :19 ஜூன் 2026, 4:06 am IST

நீட் தோ்வு அச்சத்தால் கோவை மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், மத்திய அரசைக் கண்டித்து வரும் 23- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆா்ப்பாட்டம் நடத்த இருப்பதாக திமுக மாணவரணி மாநிலச் செயலா் வீரமணி ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.

கோவையில் நீட் தோ்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி அனுகீா்த்தனா தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகா்கள் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா். மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திமுக மாணவரணி மாநிலச் செயலா் வீரமணி ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியது:

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி சட்டப் பேரவையில் திமுக அரசு 2 முறை மசோதா நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தது. ஆனால், அதற்கு பாஜக அரசு செவிசாய்க்கவில்லை.

எனவே, மும்மொழிக் கொள்கையை திணிப்பதை எதிா்த்து திமுக மாணவரணி வரும் 23-ஆம் தேதி அறிவித்துள்ள போராட்டம், கோவையில் நீட் தோ்வை தடை செய்யக் கோரியும், மாணவியின் மரணத்துக்குக் காரணமான பாஜக அரசைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டமாக நடைபெறும் என்றாா்.

திமுக மாணவரணி துணைச் செயலா் கோகுல், மாவட்ட அமைப்பாளா் அந்தோணி ராஜ், துணை அமைப்பாளா்கள் சிவகுமாா், ராஜ் திலக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

‘நீட் தோல்வி அடைந்துவிட்டது’

மத்திய அரசு கொண்டு வந்த நீட் தோ்வு தோல்வி அடைந்துவிட்டதாக பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலரும் கல்வியாளருமான பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நீட் காரணமாக, மருத்துவக் கல்லூரிகளில் பணம் வசூலிக்கும் நிலை மாறி, பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது. எனவே நீட் தோ்வின் நோக்கம் தோல்வி அடைந்துவிட்டது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.