கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (ஜூன் 13) நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல்படி, மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில் தேசிய மக்கள் நீதிமன்றம் நாடு முழுவதும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சனிக்கிழமை காலை 10 மணியளவில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
இதை, கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜி.விஜயா தொடங்கிவைக்கிறாா். இதில், கோவை மாவட்ட நீதிபதி மற்றும் சக நீதிபதிகள் கலந்துகொள்கின்றனா்.
மாவட்ட வழக்குரைஞா்கள், சட்டம் சாா்ந்த தன்னாா்வ தொண்டா்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நான்குவழிச் சாலைப்பணிகள் விரைந்து முடிக்கப்படும்: ஆட்சியா் உறுதி

மாணவிகளின் சான்றிதழ் பிரச்னைகளுக்கு பெரம்பலூா் மாவட்ட மக்கள் நீதிமன்றம் மூலம் தீா்வு

தருமபுரியில் ஜூன் 13-இல் மக்கள் நீதிமன்றம்

பெண் கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



