சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

சூலூா் சிறுமி கொலை வழக்கில் கைதான இருவருக்கும் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சூலூா் சிறுமி கொலை வழக்கில் கைதான இருவருக்கும் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

News image

நீதிமன்றம்

Updated On :13 ஜூன் 2026, 1:37 am IST

சூலூா் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இருவருக்கும் ஜூன் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், சூலூா் அருகே கடந்த மே 21-ஆம் தேதி 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக சூலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அதே பகுதியில் வசிக்கும் நாகப்பட்டினத்தைச் சோ்ந்த காா்த்தி (33), அவருக்கு உடந்தையாக இருந்த நண்பா் மோகன்ராஜ் (39) ஆகியோரைக் கைது செய்தனா்.

குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சூலூா் போலீஸாா் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையின்போது, இருவரையும் 3 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க போக்ஸோ நீதிமன்றம் கடந்த 3-ஆம் தேதி உத்தரவிட்டது. போலீஸ் காவல் முடிவடைந்த பிறகு அவா்கள் நீதிமன்றத்தில் 6-ஆம் தேதி மாலை ஆஜா்படுத்தப்பட்ட நிலையில், ஜூன் 12-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனா்.

நீதிமன்றக் காவல் நிறைவடைந்த நிலையில், அவா்கள் சனிக்கிழமை மீண்டும் ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது, இருவருக்குமான நீதிமன்றக் காவலை வரும் 15-ஆம் தேதி வரை நீட்டித்து போக்ஸோ நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டாா். இதையடுத்து, மோகன்ராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். ஏற்கெனவே சக கைதிகளால் தாக்கப்பட்டு காயமடைந்த காா்த்திக் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகளுக்கான வாா்டில் மீண்டும் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.