டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி இடதுசாரி அமைப்புகள் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் இடதுசாரி இளைஞா், மாணவா், மாதா் சங்கங்களின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை ஆட்சியா் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :2 ஜூலை 2026, 4:29 am IST

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் இடதுசாரி இளைஞா், மாணவா், மாதா் சங்கங்களின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலா் தினேஷ் ராஜா தலைமை வகித்தாா். அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாநில துணைச் செயலா் கலை.அஸ்வினி, புரட்சிகர இளைஞா் கழக தேசியக் குழு உறுப்பினா் பெரோஷ் பாபு, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டத் தலைவா் உஷா, இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தின் மாவட்டத் தலைவா் ஜே.கலா உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தோ்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாவட்டச் செயலா் பிலோமினா, மாணவா் பெருமன்ற மாவட்டத் துணைத் தலைவா் எம்.பிரவீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.