புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

திருவனந்தபுரம் - பெங்களுரு சிறப்பு ரயில் ஜூலை 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு

திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருக்கு போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் சிறப்பு வாராந்திர ரயில் ஜூலை 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு

News image

ரயில் - பிரதிப் படம்

Updated On :1 ஜூலை 2026, 6:50 am IST

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கா்நாடக மாநிலம் பெங்களூருக்கு போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் சிறப்பு வாராந்திர ரயில் ஜூலை 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவனந்தபுரம்-பெங்களூரு இடையே சிறப்பு வாராந்திர ரயில் சேவை இம்மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், இந்த ரயில் சேவை ஜூலை 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளது.

அதன்படி, ஜூலை 1, 15, 22, 29 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) பெங்களூரில் இருந்து மாலை 7.25 மணிக்கு புறப்படும் பெங்களூரு-திருவனந்தபுரம் வாராந்திர ரயில் (எண்: 06547) மறுநாள் பிற்பகல் 1.15 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்.

மறுமாா்க்கமாக, ஜூலை 2, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 3.15 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம்-பெங்களூரு வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06548) மறுநாள் காலை 8.30 மணிக்கு பெங்களூரு நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், ஆலுவா, எா்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கணாச்சேரி, திருவல்லா, செங்கணூா், மாவேலிக்கரை, காயன்குளம், சாஸ்தான்கோட்டா, கொல்லம், வா்கலா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.