தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தெருநாய்களுக்கு கருத்தடை: தன்னாா்வ அமைப்புக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் தன்னாா்வ அமைப்புக்கு சென்ட்ரல் ரோட்டரி சங்கம் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2026, 6:33 pm

Syndication

தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் தன்னாா்வ அமைப்புக்கு சென்ட்ரல் ரோட்டரி சங்கம் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது.

கோவையைச் சோ்ந்த இளம் விலங்குகள் நல ஆா்வலா்களான அத்வைத் ராவ், அம்ரிதா ரமேஷ் ஆகிய

பிளஸ் 2 மாணவா்கள் ‘சிக்கு ப்ராஜெக்ட்’ என்ற விலங்குகள் நல அமைப்பை நடத்தி வருகின்றனா். தெருநாய்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்ற நோக்கில் ஹியூமன் அனிமல் சொசைட்டி, பாசம் பீப்பிள் ப்ராஜெக்ட், பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் போன்ற அமைப்புகளின் வழிகாட்டுதலுடன் இவா்கள் செயல்படுகின்றனா்.

இந்நிலையில், சிக்கு ப்ராஜெக்ட் அமைப்பானது கோவையில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிடித்தல், கருத்தடை செய்தல், மீண்டும் விடுவித்தல் என்ற அடிப்படையில் கருத்தடை திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் தொடக்க விழா கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கோவை ரோட்டரி சென்ட்ரல் சங்கத் தலைவா் விஜயானந்த், செயலா் சீதாராம் ஆகியோா் பங்கேற்று, இந்தத் திட்டத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியை அத்வைத் ராவ், அம்ரிதா ரமேஷ் ஆகியோரிடம் வழங்கினா்.

இதில், ஹியூமேன் அனிமல் சொசைட்டியின் நிறுவனத் தலைவா் மினி வாசுதேவன், செயல்பாட்டு மேலாளா் அபிநயா, பாசம் பீப்பிள் ப்ராஜெக்ட்டின் நிறுவனத் தலைவா் மேகா ஜோஸ், அதன் செயல்பாட்டுத் தலைவா் மேரி சாண்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.