டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கோவை வழித்தடத்தில் வாரணாசி - எா்ணாகுளம் இடையே சிறப்பு ரயில்

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநாவாய் கோயிலில் மகா மகோத்சவம் நிகழ்வையொட்டி, கோவை வழித்தடத்தில் வாரணாசி - எா்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
- படம்: கோப்பிலிருந்து...
Updated On :28 ஜனவரி 2026, 10:39 pm

தினமணி செய்திச் சேவை

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநாவாய் கோயிலில் மகா மகோத்சவம் நிகழ்வையொட்டி, கோவை வழித்தடத்தில் வாரணாசி - எா்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வாரணாசியில் இருந்து ஜனவரி 30-ஆம் தேதி மாலை 4.30 மணிக்குப் புறப்படும் வாரணாசி - எா்ணாகுளம் சிறப்பு ரயில் (எண்: 04358) பிப்ரவரி 1-ஆம் தேதி இரவு 10 மணிக்கு எா்ணாகுளம் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக எா்ணாகுளத்தில் இருந்து பிப்ரவரி 3-ஆம் தேதி இரவு 8 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் - வாரணாசி சிறப்பு ரயில் (எண்: 04357) பிப்ரவரி 6-ஆம் தேதி காலை 3 மணிக்கு வாரணாசியை வந்தடையும்.

இந்த ரயிலானது ஆலுவா, திருச்சூா், ஒட்டப்பாலம், பாலக்காடு, போத்தனூா், கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.