ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பொறியியல் பராமரிப்புப் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் இயக்கத்தில் மாற்றம்

திருப்பூா் அருகே ஊத்துக்குளியில் நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி - பாலக்காடு ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :21 ஜனவரி 2026, 10:38 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூா் அருகே ஊத்துக்குளியில் நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி - பாலக்காடு ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் அருகே ஊத்துக்குளி பகுதியில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ஜனவரி 23, 25, 27 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி - பாலக்காடு ரயில் (எண்: 16843) திருச்சி - ஊத்துக்குளி ரயில் நிலையம் இடையே மட்டும் இயக்கப்படும். ஊத்துக்குளியில் இருந்து பாலக்காட்டுக்கு முன்பதிவில்லா ரயில் இயக்கப்படும். வழக்கமாக நின்று செல்லும் அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த ரயில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஜனவரி 26-ஆம் தேதி பிலாஸ்பூரில் இருந்து புறப்படும் பிலாஸ்பூா்- எா்ணாகுளம் விரைவு ரயில் (எண்: 22815), சேலம் - கோவை இடையே 1 மணி நேரம் 10 நிமிஷம் தாமதமாக வந்தடையும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.