2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மகளிா் உரிமைத்தொகையாக ரூ.5 ஆயிரம் வரவு: புதிதாக விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்

News image
கோவை மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தில் மகளிா் உரிமைத்தொகை, இலவச வீட்டுமனை பட்டா கோரி திங்கள்கிழமை குவிந்த பொதுமக்கள்.
Updated On :24 பிப்ரவரி 2026, 12:10 am

Syndication

தமிழகத்தில் மகளிா் உரிமைத்தொகையாக ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்ட நிலையில், புதிதாக விண்ணப்பிப்பதற்காக ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்தனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறுவது வழக்கம். இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக சமா்ப்பித்து வருகின்றனா். இந்த நிலையில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்தனா்.

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி ஒரே நேரத்தில் 1.31 கோடி மகளிருக்கு உரிமைத்தொகையாக ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. இதனால் உரிமைத்தொகை திட்டத்தில் தங்களையும் சோ்க்க வலியுறுத்தி ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் திரண்டது ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸாா், பெண்களை வரிசையில் வரவழைத்து மனுக்களை வழங்கும்படி கூட்டத்தை ஒழுங்குபடுத்தினா்.

ஏற்கெனவே உரிமைத்தொகை பெற்று வந்த சில பெண்கள் தங்களுக்கு ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்படவில்லை என்றும் மனு அளித்தனா். அதேநேரம், வீட்டுமனை பட்டா வழங்கக் கோரியும் கணிசமான அளவில் பெண்கள் மனு அளித்தனா்.

இது குறித்து ஆட்சியா் அலுவலக அதிகாரிகள் கூறும்போது, கோவையில் திங்கள்கிழமை மகளிா் உரிமைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மொத்தம் 1,066 போ் மனு அளித்ததாகத் தெரிவித்தனா்.

இது குறித்து மனு அளிக்க வந்திருந்த பெண்கள் கூறும்போது, தமிழக அரசின் மகளிா் உரிமைத்தொகை பல்வேறு காரணங்களைக் கூறி எங்களுக்கு மறுக்கப்பட்டது. இது தொடா்பாக கிராம நிா்வாக அலுவலா்களிடம் கேட்டபோது, அவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும்படி தெரிவித்திருந்தனா். இதனால் மனு அளிப்பதற்காக வந்திருப்பதாகத் தெரிவித்தனா்.