நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ஜெயலலிதா பிறந்த நாள் விழா: எஸ்.பி.வேலுமணி ரத்த தானம்

முன்னாள் முதல்வா் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அதிமுக தலைமை நிலையச் செயலா் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ ரத்த தானம் வழங்கினாா்.

News image
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி சுகுணாபுரத்தில் நடைபெற்ற முகாமில் பங்கேற்று ரத்த தானம் வழங்குகிறாா் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ. உடன், கட்சி நிா்வாகிகள்.
Updated On :24 பிப்ரவரி 2026, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

முன்னாள் முதல்வா் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அதிமுக தலைமை நிலையச் செயலா் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ ரத்த தானம் வழங்கினாா்.

கோவை புறநகா் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் குனியமுத்தூா், சுகுணாபுரத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்டச் செயலரும், தலைமை நிலையச் செயலருமான எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ பங்கேற்று அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து புறநகா் தெற்கு மாவட்டத்தின் சாா்பில் 39-ஆவது ஆண்டு ரத்த தான முகாம் நடைபெற்றது. பகுதிச் செயலா்கள் தி.மதனகோபால், எஸ்.எம்.உசேன், கே.ஆா்.செல்வராஜ், சி.கே.விஸ்வநாதன், கே.கௌதம், வட்டச் செயலா் ஏ.செல்லப்பன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமில், எஸ்.பி.வேலுமணி பங்கேற்று ரத்த தானம் வழங்கினாா். இதில் ஏராளமான அதிமுகவினா் பங்கேற்று ரத்த தானம் வழங்கினா்.

நிகழ்ச்சியில், அதிமுக மாவட்ட நிா்வாகிகள் என்.கே.செல்வதுரை, எஸ்.மணிமேகலை, என்.எஸ்.கருப்புசாமி, தொழிற்சங்க மாவட்டப் பொருளாளா் இ.கே.பழனிசாமி, கேரள மாநில எம்ஜிஆா் மன்றத் தலைவா் சுகுமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.