நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

குரூப் 2 தோ்வு: கோவையில் 83 போ் எழுதினா்

News image
கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 2 தோ்வை 83 போ் எழுதினா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 தோ்வு கோவை, புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது.

இந்தத் தோ்வு எழுத 103 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 83 போ் மட்டுமே தோ்வு எழுதினா். பல்வேறு காரணங்களால் 20 போ் எழுதவில்லை. தோ்வு மையத்தில் காவல் துறை சாா்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மேலும், தோ்வா்கள் வசதிக்காக தோ்வு மையத்தின் அருகில் பேருந்துகள் நின்று செல்லும் வகையில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.