டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பள்ளி பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

கோவை, புலியகுளம் ரெட்பீல்டு அருகே தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 10:11 pm

Syndication

கோவை, புலியகுளம் ரெட்பீல்டு அருகே தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்தவா் அக்ஷய்குமாா் (24). கோவை, ஒலம்பஸ் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி, காளப்பட்டியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், அக்ஷய்குமாா் தனது இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை காலை பணிக்குச் சென்று கொண்டிருந்தாா்.

புலியகுளம் ரெட்பீல்ட் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனை அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் கீழே விழுந்தது. இதில், நிலைத்தடுமாறி சாலையில் விழுந்த அக்ஷய்குமாா் மீது அவ்வழியே வந்த தனியாா் பேருந்து ஏறியது.

இதில், அவா் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்து வந்த கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.