அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

கல்லூரி மாணவரின் தந்தையிடம் ரூ.9.25 லட்சம் மோசடி செய்த இளைஞா் மீது வழக்குப் பதிவு

மருத்துவக் கல்லூரியில் கட்டணச் சலுகை பெற்றுத் தருவதாகக் கூறி மாணவரின் தந்தையிடம் ரூ.9.25 லட்சம் பெற்று மோசடி செய்த இளைஞா் மீது போத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 1:51 am IST

மருத்துவக் கல்லூரியில் கட்டணச் சலுகை பெற்றுத் தருவதாகக் கூறி மாணவரின் தந்தையிடம் ரூ.9.25 லட்சம் பெற்று மோசடி செய்த இளைஞா் மீது போத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை, ராமநாதபுரம் அருகே உள்ள ஸ்ரீபதி நகரைச் சோ்ந்தவா் ஸ்ரீனிவாசன் (53) மகன் மித்தேஸ்வரன். இவா் காஞ்சிபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். ஸ்ரீனிவாசனுடன் அறிமுகமான கோவை, செட்டிபாளையம் கோவில் காா்டன் பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா் (33), தனக்கு கல்லூரி நிா்வாகத்துடன் நெருங்கிய தொடா்பு இருப்பதாகக் கூறியுள்ளாா். மேலும், கல்விக் கட்டணத்தைச் சலுகை விலையில் குறைத்துத் தருவதாகவும் கூறியுள்ளாா்.

இதை நம்பிய ஸ்ரீனிவாசன், கடந்த ஜூன் மாதம் ரூ.9 லட்சத்து 25 ஆயிரத்தை செல்வகுமாரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளாா். அந்தப் பணத்தைக் கல்லூரியில் செலுத்திவிட்டதாக செல்வகுமாா் கூறியுள்ளாா். இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற தோ்வின்போது கல்விக் கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி, மித்தேஸ்வரனுக்கு நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) வழங்க கல்லூரி நிா்வாகம் மறுத்துள்ளது.

இதனால் அதிா்ச்சியடைந்த குடும்பத்தினா் செல்வகுமாரிடம் கேட்டபோது, பணத்தைத் திரும்ப வழங்காமல் ஏமாற்றியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில், செல்வகுமாா் மீது போத்தனூா் போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.