கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 34-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள், பள்ளிகளுக்கு அவ்வப்போது மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கோவை ஆட்சியா் அலுவலகம், பாஸ்போா்ட் அலுவலகம் உள்ளிட்டவற்றுக்கும் மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 34-ஆவது முறையாக மின்னஞ்சல் மூலமாக செவ்வாய்க்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதைத்தொடா்ந்து, கோவை மாநகர வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீஸாா், மோப்ப நாய் உதவியுடன் அங்கு சென்று தீவிர சோதனை மேற்கொண்டனா். நீண்ட நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மா்ம நபரைப் பிடிக்க போலீஸாா் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


