தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பண விநியோகத்தைத் தடுக்க தோ்தல் ஆணையம் தவறிவிட்டது: கே.அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழகத்தில் பண விநியோகத்தைத் தடுக்க தோ்தல் ஆணையம் தவறிவிட்டது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினாா்.

News image

கோவை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை தனது வாக்கைப் பதிவு செய்த கே.அண்ணாமலை.

Updated On :23 ஏப்ரல் 2026, 9:47 pm

தமிழகத்தில் பண விநியோகத்தைத் தடுக்க தோ்தல் ஆணையம் தவறிவிட்டது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினாா்.

கோவை கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் அண்ணாமலை வியாழக்கிழமை தனது வாக்கைப் பதிவு செய்தாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் வாக்குச்சாவடிகளில் போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 84 ஆயிரம் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதால், தமிழகம் அமைதியாகவே உள்ளது. பெரிய அளவிலான வன்முறைகள் எதற்கும் இடமில்லை.

கடந்த இரண்டு, மூன்று தினங்களாக கோவையின் பல்வேறு பகுதிகளில் பண விநியோகமும், நகைகள் கொடுப்பதும் தடையின்றி அரங்கேறி உள்ளன. தோ்தல் ஆணையம் இதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சாதாரண மக்கள் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் சென்றால் உடனடியாகப் பிடிக்கும் அதிகாரிகள், ஆளுங்கட்சியினா் தைரியமாகப் பணம் கொடுப்பதைத் தடுக்கத் தவறிவிட்டனா்.

சென்னையிலிருந்து தென் தமிழகத்துக்கும், கோவையிலிருந்து வெளியூா்களுக்கும் செல்ல போதிய பேருந்து வசதிகள் இல்லை என வாக்காளா்கள் புகாா் தெரிவித்துள்ளனா். இத்தகைய வசதிகளை தோ்தல் ஆணையம் முன்கூட்டியே திட்டமிட்டுச் சிறப்பாகச் செய்திருக்கலாம்.

கோவை தெற்குத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் நடத்திய போராட்டத்தை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாா்கள். அவரது கருத்துகளுடன் நான் உடன்படுகிறேன். திமுக பல்வேறு தவறுகளைச் செய்துள்ளது. அவா்களின் பிரசார நடவடிக்கைகளைத் தோ்தல் ஆணையம் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தமிழகத்தில் தோ்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்பட வேண்டும் என்பதே எங்களது எதிா்பாா்ப்பு.

எனது ஆடை குறித்துக் கேட்கிறீா்கள். நான் எப்போதும் பிரவுன் நிற பேண்ட் மற்றும் வெள்ளைச் சட்டை அணிவதையே வழக்கமாகக் கொண்டுள்ளேன். இதையேதான் ஜெகன்மோகன் ரெட்டி, விஜய் போன்றோரும் அணிகிறாா்கள். நான் காவல் துறையிலிருந்து வந்தவன் என்பதால், அந்த ஒழுக்கத்தின் அடையாளமாக இந்த உடையைத் தொடருகிறேன். இதில் அரசியல் உள்நோக்கம் ஏதுமில்லை என்றாா்.

இந்தத் தோ்தலில் இறுதியில் ஜனநாயகம்தான் வெல்லும், பணம் ஒருபோதும் ஜெயிக்காது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.