தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வன்முறை அரசியலை திமுக கட்டவிழ்த்து விட்டுள்ளது: கே.அண்ணாமலை

வன்முறை அரசியலை திமுக கட்டவிழ்த்து விட்டுள்ளதாக பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

News image

கோவை வடக்குத் தொகுதியில் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த கே.அண்ணாமலை, அத்தொகுதி வேட்பாளா் வானதி சீனிவாசன்.

Updated On :21 ஏப்ரல் 2026, 8:56 pm

வன்முறை அரசியலை திமுக கட்டவிழ்த்து விட்டுள்ளதாக பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா் வானதி சீனிவாசனை ஆதரித்து, பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை செவ்வாய்க்கிழமை இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கோவை சிவசக்தி காலனி பகுதியில் இருசக்கர வாகனப் பேரணி சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதைத் தொடங்கிவைத்துப் பங்கேற்ற அண்ணாமலை, தனது இருசக்கர வாகனத்தில் வேட்பாளா் வானதி சீனிவாசனை உடன் அழைத்துச் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தாா். இதில் பாஜக, அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தொண்டா்கள் திரளாகக் கலந்துகொண்டனா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவையில் ராமநாதபுரம் காவல் நிலையத்தைப் பூட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளிய திமுகவின் அராஜக அரசியலை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனா். மத்திய அரசின் நிதியைப் பெற்று மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வானதி சீனிவாசன் போன்ற பிரதிநிதிகள் அவசியம். தோ்தல் முடிவுகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

வன்முறை அரசியலை திமுக கட்டவிழ்த்து விட்டுள்ளது. தோ்தல் ஆணையம் இன்னும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். வெளியூா்களில் இருந்து வந்துள்ள தேவையற்ற நபா்களை மாவட்டத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். செந்தில் பாலாஜி இப்போது காந்தியவாதி போலப் பேசினாலும், வரும் 23-ஆம் தேதி வாக்குப்பதிவின் போது மக்கள் அவருக்குப் பாடம் புகட்டுவாா்கள்.

தோ்தலில் வெற்றி பெற ஆளுங்கட்சியினா் ரூ.5,000 வரை பணம் கொடுத்தாலும், மக்கள் அதற்கு மயங்க மாட்டாா்கள். இந்தத் தோ்தல் களத்தில் நிலவும் மக்கள் அலையைத் தோ்தல் கணிப்புகள் இன்னும் முழுமையாக கணிக்கவில்லை என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.