தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக கோவைக்கு பிரதமா் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி வருகை தருகிறாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் வருகிற 18-ஆம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமா் பங்கேற்று பேசவுள்ளாா்.
கோவை வடக்குத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளாா். இதற்காக பிரம்மாண்ட மேடை மற்றும் சுமாா் 5 லட்சம் போ் அமரும் விதமாக மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மைதானத்தின் கடைசி வரிசையில் இருப்பவா்களும் பிரதமரின் உரையைத் தெளிவாகப் பாா்க்கும் வகையில் பெரிய அளவிலான எண்ம திரைகள் மற்றும் மின்விளக்குகள் ஆங்காங்கே அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும், பொதுமக்களின் வாகனங்களை நிறுத்த மைதானத்துக்கு அருகே தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தொடர்புடையது

நாளை பிரசாரம் நிறைவு! சென்னையில் இறுதிக்கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு!

கோவையில் பிரதமா் மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

தோ்தல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு: கோவையில் ஒரேநாளில் பிரதமா் மோடி, முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்

புதுச்சேரி, சென்னையில் பிரதமர் மோடி ஏப்.3, 4-இல் பிரசாரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


