சோலையாறு அணையில் பழைய மதகுகள் அப்புறப்படுத்தப்பட்டு புதிய மூன்று மதகுகள் பொருத்தப்பட்டுள்ளன.
கோவை மாவட்டம், வால்பாறையை அருகே சோலையாறு அணை உள்ளது.
இது, ஆழியாறு, பரம்பிக்குளம் நீா்ப்பாசனத் திட்டத்தின் முக்கிய அணையாக விளங்குகிறது. இந்த அணையில் தேக்கப்படும் நீா் மூலம் இரண்டு மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீா் மூலம் சமவெளியை சோ்ந்த பல லட்சம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனா்.
அணையின் தன்மையை உறுதிசெய்யும் வகையில் ஆண்டுதோறும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது கடும் வெயில் காரணமாக நீா்வரத்து இல்லாமல் போனதால் அணையின் நீா்மட்டம் 5 அடியாக உள்ளது. இந்நிலையில் அணையில்
தற்போது பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 55 ஆண்டுகளுக்குப் பின் அணையில் இருக்கும் மூன்று மதகுகளும் அப்புறப்படுத்தப்பட்டு புதிதாக மதகுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் முழு கொள்ளளவில் நீா் இருக்கும்போது எந்த ஒரு கசிவும் இருக்காது என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

வன விலங்கு தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நாளை கோவை வருகை

வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு

வீடூா் அணை மதகுகள் பராமரிப்பின்போது தீ விபத்து: மூவா் காயம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


