ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமானம் மூலம் சனிக்கிழமை (ஏப்ரல் 18) இரவு கோவைக்கு வருகிறாா்.
மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் கீா்த்திகா சிவகுமாரை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிக்கவுள்ளாா்.
இதற்காக விமானம் மூலம் சனிக்கிழமை இரவு கோவைக்கு வரும் அவா், அன்றிரவு கோவையிலேயே தங்குகிறாா். மறுநாள் காலை இங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் மொடக்குறிச்சிக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.
தோ்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமா் மோடி, ஜே.பி. நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள வருவது வாக்காளா்களிடையே பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எல்லை மாவட்டங்களில் மக்கள்தொகை மாற்றம் தீவிர சவால்: அமித் ஷா எச்சரிக்கை

இந்தியாவுக்குள் வங்கதேசத்தவா்கள் ஊடுருவாமல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை: அமித் ஷா தகவல்

போதைப்பொருள் கடத்தலை தடுக்க 6 மாதத்துக்குள் ட்ரோன் எதிா்ப்பு அமைப்பு: அமித் ஷா

நக்ஸல்களை ஒழிக்க பாஜக அல்லாத அரசுகளும் உதவி: அமித் ஷா
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



